ஆயில் புல்லிங் செய்தால் என்ன ஆகும்?

0
Oil Pulling in Tamil

ஆயில் புல்லிங் பற்றி ஒரு சிறிய குறிப்பு:

ஆயில் புல்லிங் பழங்கால ஆயுர்வேத முறை. தேங்காய்🥥 எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்து 20 நிமிடத்திற்கு கொப்பளிக்க வேண்டும். இதை செய்தால் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதும், பல்😬 சம்மந்தமான பிரச்சனை மற்றுமின்றி பல உடல் தொடர்பான பிரச்சனைகளையும் போக்குகிறது.

எப்பொழுது ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்🤔?

ஆயில் புல்லிங் இரவு😴 உணவுக்குப்பின் தூங்குவதற்கு முன் அல்லது காலையிலும் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 முதல் 3 ஸ்பூன்கள் வாயில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வாயில் அனைத்து இடங்களில் படும்படியாக கொப்பளிக்க வேண்டும் . சிறு அளவு கூட விழுங்கி விடக்கூடாது. எண்ணையை வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள்💛 நிறம் ஆகும் வரை கொப்பளித்து திறந்த வெளியில் துப்பி விடவும். ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. காலையில்🌄 ஆயில் புல்லிங் செய்த ஒரு மணி நேரத்திற்கு பின்னரே காலை உணவு 🍳சாப்பிட வேண்டும்.

பாக்டீரியாக்களை கொல்லும்:

நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் சில, வாய்க்குள் தங்குவதாலும், புகைப்பழக்கத்தாலும்🚬 பிற சில காரணங்களாலும் வாய்க்குள் பாக்டீரியா தங்க வாய்ப்புகள் அதிகம். அவை வாய் துர்நாற்றம், சொத்தைப்பல்😬, ஈறு வீக்கம் ஆகிய நோய்களுக்கு வலி வகிக்கிறது. வல்லுநர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆயில் புல்லிங் செய்பவர்களுக்கு எச்சில் சுத்தமாவதோடு வாய் ஆரோக்கியமுமாகும் என தெரிவித்துள்ளனர்.

கெட்ட சுவாசம்:

உணவு, புகையிலை, வறண்ட வாய்😵 மற்றும் மருந்து மாத்திரை💊 பயன்படுத்துவதால் பாக்டீரியா உள்தங்கி கெட்ட சுவாசம் ஏற்பட வாய்ப்புள்ளது. வல்லுநர்கள் கணிப்பின் படி ஆயில் புல்லிங் செய்வதால் கெட்ட சுவாசத்தில் இருந்து விடுபடலாம்.

Oil Pulling

மூட்டு பிரச்சனைக்கு ஆயில் புல்லிங் ஆ😨?

பெரியவர்கள் அனைவருக்கும் மூட்டு வலி பிரச்சனை உள்ளது. அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்தால் மூட்டு வலி பிரச்சனை மற்றும் மூட்டு🤝 வீக்கத்திற்கு விடுதலை கிடைக்கும்.

தைராய்டு:

தைராய்டு பிரச்சனை உள்ளர்களுக்கு கூட ஆயில் புல்லிங் சிறந்த நிவாரணி. அவர்கள் ஆயில் புல்லிங் செய்வது மூலம் தைரொய்ட் சுரபிகள் சீராக சுரக்கப்படுகிறது.

முகப்பொழிவுக்கு:

தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் செய்வதால், உடம்பில் உள்ள நச்சு தன்மை நீங்கி இயற்கையான மற்றும் அழகான முகப்பொழிவை🥰😍 பெறலாம்.

சுறுசுறுப்பாக🤹‍♂️ இருக்க:

நம்முள் சிலர் எப்பொழுதும் சோம்பலாகவே 😪 இருக்கின்றனர். இதனால் அவர்கள் அன்றாட வேலைகளை செய்ய விருப்பமில்லாமல் வாழ்க்கையையே தொலைத்தது போல நினைக்கின்றனர்.

ஆயில் புல்லிங் செய்தல் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்க உதவுகிறது. இரவில் நல்ல உறக்கத்திற்கு 🛌கூட உதவுகிறது.

கண்👀 பார்வையை சீராக்க:

நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்வதனால், உடம்பு குளிர்ச்சி பெற்று கண்களில் உள்ள நரம்புகள் சீராகிறது. இதன்மூலம் கண் பார்வை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

நிறைய மருத்துவ நன்மைகளை பெற்றுள்ளது ஆயில் புல்லிங். இதை நாம் செய்வது மூலம் ஏராளமான வாய் பிரச்சனைகளில் இருந்து காக்கலாம். ஆயில் புல்லிங் நீங்களும் செய்து பாருங்கள்🤝.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here